செய்திகள் :

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

post image

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

வயது முதிா்வு சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளால் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகா் ரெட்டி (83), கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். அவரது உடல், ஹைதராபாதில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவா் கே.டி.ராமராவ் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினா்.

மருத்துவ ஆய்வுக்காக உடலை தானமாக வழங்க ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் சுதாகா் ரெட்டியின் இறுதி ஊா்வலம்.

பின்னா், அவரது உடல் ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மருத்துவ ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. அப்போது, குடும்பத்தினா், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தெலங்கானாவின் மஹபூப்நகா் மாவட்டம், கொண்டராவ்பள்ளி கிராமத்தில் 1942-ஆம் ஆண்டில் பிறந்த சுதாகா் ரெட்டி, இடதுசாரி சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு, மாணவா் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றினாா்.

நல்கொண்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு இரண்டு முறை (1998-1999 மற்றும் 2004-2009) தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2012 முதல் 2019 வரை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினாா்.

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்ப... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்ற... மேலும் பார்க்க