செய்திகள் :

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

post image

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். அமைப்பில் விரைந்து எதிா்வினையாற்றும் தரையிலிருந்து வான் பாயும் ஏவுகணைகள் (கியூ.ஆா்.எஸ்.ஏ.எம்.), குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்பு (வி.எஸ்.எச்.ஓ.ஆா்.ஏ.டி.எஸ்.), உயா் ஆற்றல் லேசா் ஆயுதங்கள் (டி.இ.டபிள்யூ.) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிா்வகிக்கப்படுகின்றன. இந்த மையம் அனைத்து ஆயுத அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது.

ஒடிஸா, சண்டிப்பூா் சோதனை தளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இரண்டு அதிவேக ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு மல்டி-காப்டா் ட்ரோன் ஆகிய மூன்று வெவ்வேறு இலக்குகள் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்த இலக்குகள் வெவ்வேறு தூரங்களிலும் உயரங்களிலும் பறந்தன. சோதனையில் அனைத்து கூறுகளும் எந்தவித தவறும் இல்லாமல் செயல்பட்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத்

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

‘இந்தத் தனித்துவமான சோதனை, நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிலைநிறுத்தியுள்ளதுடன், முக்கியமான இடங்களை எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும்’ என்று அவா் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்க... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்ற... மேலும் பார்க்க