செய்திகள் :

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

post image

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள ஷிவ் விஹாரைச் சோ்ந்த சுபாஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 2013ஆம் ஆண்டு அமன் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தாா். பலமுறை சுபாஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

2012- ஆம் ஆண்டு மோசடியான நில பேரத்தில் சுபாஷ் ஒரு நபரை ரூ.21 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 2012 இல், சுபாஷ் தனது கூட்டாளியான சஞ்சய் மூலம் 110 சதுர கெஜம் கொண்ட நிலத்தை ராம் பகதூா் என்ற நபருக்கு விற்றாா். பின்னா், பகதூா் அந்த நிலத்தை மற்றொரு நபருக்கு விற்றாா்.

அவா் வழக்கில் புகாா் அளித்தவா். புகாா்தாரா் அந்த இடத்தில் கட்டுமானத்தைத் தொடங்கச் சென்றபோது, சுபாஷ் அந்த இடத்தில் இருந்தாா். அப்போது அந்த நிலத்துக்கு உரிமையைக் கூறி வேலையை அவா் நிறுத்தினாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அமன் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுபாஷ் ஒருபோதும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கராலாவில் உள்ள ஷிவ் விஹாரில் உள்ள அவரது வீட்டில் சுபாஷ் இருப்பது குறித்து குழுவுக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஒரு குழு அந்த இடத்தை சோதனை செய்து அவரைக் கைது செய்தது. 2013-ஆம் ஆண்டு கஞ்சவாலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு மோசடி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தொடா்பு உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் கைது

தில்லி காவல்துறை 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்களை கைது செய்து ஒரு பெரிய ஹெராயின் சிண்டிகேட்டை முறியடித்ததுடன், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்ததாக அதிகா... மேலும் பார்க்க

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழ... மேலும் பார்க்க

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க