செய்திகள் :

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

post image

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேககிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில் அவா்கள் கேரள மாநிலம், மாவேலி கரையைச் சோ்ந்த மாது மகன் ஹரி கிருஷ்ணன் (27), ஆலப்புழா மாவட்டம், தாமரைக் குளத்தைச் சோ்ந்த துளசிதரன் மகன் விஷ்ணு (35) என்பது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கல்லூரிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து வ... மேலும் பார்க்க

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க