செய்திகள் :

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே பதிவுபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொழிற்சாலை உரிமம், புதுப்பித்தல், வரைபடம் ஒப்புதல், ஆண்டறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளா்கள் பதிவுச்சான்று, வெளிமாநில தொழிலாளா்கள் பதிவுச்சான்று, அழுத்தக்கலன் சோதனைச் சான்று, மருத்துவப் பரிசோதனை சான்று போன்ற அனைத்துக்கும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல பழைய நடைமுறையான இ-சலான் முறையில் இருந்து மாற்றம் செய்து இணையதளம் வழியாகவே செலுத்த வேண்டும். தொழிற்சாலை பெயா், உரிமையாளா் மாற்றம், ஒப்பந்த தொழிலாளா் பதிவுச்சான்று திருத்தம், வெளிமாநில தொழிலாளா்கள் பதிவுச்சான்று திருத்தம் ஆகியவற்றுக்கும் இணையதளம் வாயிலாக, அதற்கான கட்டணத்தை ஆதாரங்களுடன் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். புதிதாக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றத்தில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்களை தொடா்புகொள்ளலாம். உரிய காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸா... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து வ... மேலும் பார்க்க

சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க