செய்திகள் :

Sarathkumar: ``MGR-போல மக்கள் சக்தியுடையவர் நடிகர் சரத்குமார்" - நயினார் நாகேந்திரன்

post image

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ``நட்புக்கு இலக்கணம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அவர் நினைத்திருந்தால் ஆயிரம் கோடி ரூபாய் கூட சம்பாதித்திருக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நிகரான மக்கள் சக்தி படைத்தவர்.

ஆனால் நம்மைப் போல சாதாரணமாக வாழ்ந்துவரும் நல்ல மனிதர். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் முடிசூடா மன்னனாக, சமத்துவக் கட்சியின் தலைவராக இருப்பவர் சரத் குமார். எப்போது சரத் குமார் நெல்லை வந்தாலும் என்னைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சரத்குமார் - நயினார் நாகேந்திரன்
சரத்குமார் - நயினார் நாகேந்திரன்

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் படத்திலும் நடித்து, மக்களிடமும் நடித்து மக்களின் நாடித்துடிப்பை அறிந்து மக்களுக்காக பணியாற்றினார்.

அதுபோலதான் நடிகர் சரத்குமாரும் மக்களின் நாடித்துடிப்பை தன் கையில் வைத்திருக்கிறார். அவருக்கு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை செயல்படுத்தும் கருவிதான் பா.ஜ.க. அதில் தன்னையும் இணைத்துக்கொண்டவர்.

உலகிலேயே பெரிய கட்சி பா.ஜ.க. எங்களுக்கும் சுப்ரீம் ஸ்டாருக்கும் எதிரியே கிடையாது. பா.ஜ.க தலைமை அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு விரைவில் பெரியப் பொறுப்புகளை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2026-ல் திராவிடக் கழகத்தை வீட்டுக்கு அனுப்பும் பா.ஜ.க-வுக்கு ஒரு தூதராக சரத்குமார் இருப்பார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை ஐஐடி-க்கு தாரை வார்க்கப்படும் 100 ஏக்கர் விவசாயப் பண்ணை! - ஆரோவில் நகரத்தில் நடப்பது என்ன ?

ஆரோவில் சர்வதேச நகரம்புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில் சர்வதேச நகரம். ஸ்ரீஅரவிந்த அன்னையின் கனவு பூமியான இந்த சர்வதேச நகரத்தில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்... மேலும் பார்க்க

``துப்புரவுத் தொழிலாளர்கள் பணி குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது'' - திருமாவளவன்

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல்தூத்துக்குடியில் வி.சி.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்... மேலும் பார்க்க

``நிலவில் முதன் முதலில் கால்வைத்தது யார்?" - அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றினார். அப்போது, ``விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்"... மேலும் பார்க்க

Sarathkumar: ``இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய்" - TVK விஜய் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் பதில்

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் சரத் குமார், ``நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்... மேலும் பார்க்க

``சிந்தூர் ஆபரேஷன் அல்ல; உண்மையான போர்'' - பாகிஸ்தான் ட்ரோனை நடுவானில் அழித்த சிவகங்கை கந்தன்

ராணுவ வீரர் கந்தன்சிந்தூர் ஆப்பரேஷனில் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை துல்லியமாக தாக்கி அழித்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் டி.கந்தனுக்கு, புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்கப்பதக்கம் வழங்கி அரசு... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய்: `எங்கு சிறந்த டீல் கிடைக்கிறதோ, அங்கே தான் வாங்க முடியும்' - இந்தியா சொல்லும் நியாயம்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா - அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தி... மேலும் பார்க்க