செய்திகள் :

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு

post image

தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வரும் 09.01.2026 ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமைக் கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம், மகளிர் அணியினர் மற்றும் கட்சத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூர் மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா ஏற்கெனவே தெரிவித்திருப்பதால் கட்சித் தொண்டர்களிடையே இந்த மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளான இன்று கட்சியின் மாநாடு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The date for the DMDK state convention has been announced.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தை இன்று(ஆக. 25) முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின... மேலும் பார்க்க

சாதாரண மக்களுக்காக செயலாற்றியவா் வசந்திதேவி!

திருச்சி: திருச்சியில் மறைந்த கல்வியாளரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னாள் தலைவருமான வே. வசந்திதேவிக்கு புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கட... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

அவிநாசி: திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர, பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்... மேலும் பார்க்க