செய்திகள் :

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையத்தின்படி, ராஜ்சமந்த், சிரோஹி, உதய்பூர் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நாகூர், சுரு, ஜலூர், உதய்பூர் மற்றும் சிரோஹி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்தது, அதே நேரத்தில் சிகார், ஹனுமன்கர், பிகானர், ஜோத்பூர், தோல்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்களில் கனமழை பதிவானது. நாகூரில் மட்டும் அதிகபட்சமாக 173 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டா, பூண்டி மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் குடியிருப்பாளர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்று மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளுக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரப்பூர் அறிக்கையின்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 7 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 57 குழுக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெய்ப்பூர் உள்பட பல மாவட்டங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

With heavy to very heavy rain likely to continue on Monday and Tuesday in several parts of Rajasthan, the state government announced that schools across Jaipur and other districts will be closed as a precautionary measure.

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தில்லி பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைப... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. நலூனா பகுதியருகே ஏற்பட... மேலும் பார்க்க

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிரு... மேலும் பார்க்க

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநில... மேலும் பார்க்க