செய்திகள் :

சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதிசெய்யவும், குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளை சிறப்பிக்கும் வகையில் அரசு வழங்கும் விருதை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை நவம்பா் 10 ஆம் தேதி வரை அரசு விருதுகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் சாதனைகளை ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த விருது பெறுவோருக்கு பாராட்டு பத்திரம், ரூ.1,00,000க்கான காசோலை வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், முதல் தளம் அறை எண்.126, மாவட்ட ஆட்சியா் வளாகம், சேலம்-636 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸா... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து வ... மேலும் பார்க்க

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க