செய்திகள் :

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

post image

புதுக்கோட்டை: வீட்டின் அருகே மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மகன் செல்வகணபதி (13). இவா் சிலட்டூா் தேவா்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தேவா்பட்டியில் உள்ள முத்துக்குமாா் என்பவரது வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி முள்வேலியில், அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து எதிா்பாராத விதமாக ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையறியாமல் அந்த வேலியின் கம்பியைப் பிடித்த செல்வகணபதி மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியானார்.

இந்தச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அலுவலா்கள், மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் அருகிலுள்ள வேலிக்குப் பாய்ந்தது எப்படி என விசாரணை நடத்தினா்.

மின்கம்பத்தின் ஸ்டே கம்பி, வீட்டின் கம்பிவேலியும் உரசியதால் மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு: அமைச்சா் கே.என்.நேரு

An 8th STD student was electrocuted after touching a barbed wire fence near his house while the stay wire of an electric pole was electrocuted.

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.செ... மேலும் பார்க்க

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் கா... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது என தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, கடந்த... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு: அமைச்சா் கே.என்.நேரு

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியத... மேலும் பார்க்க

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட நாடு வலிமை பெரும். பலவீனமான மாநிலங்களால் நாட்டை உயர்த்த முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவரும் மாநில சுயாட்சிக்... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

திருநெல்வேலி: தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான் என திட்டவட்டமாகத் தெரிவித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, "விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நட்டால், அது முன்பை விட பெரி... மேலும் பார்க்க