செய்திகள் :

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை கண்டனம்!

post image

கேரளத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதற்கும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டிலிருந்து, தமது சொந்த மாநிலத்திலிருந்து, ஹிந்து மதத்தில் நம்பிக்கை பூண்ட மக்கள் விடுக்கும் எந்தவொரு அழைப்புகளையும் அழைப்பிதழ்களையும் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்கும் அவர்(ஸ்டாலின்), கேரளத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏறுக்கொண்டுள்ளார். இது விமர்சனத்திற்குரிய விஷயமாகும்.

அவர்கள் தொடர்ந்து ஹிந்து உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்கள். அவரது மகன் பேசும்போது, சநாதன தர்மம் ஒரு நுண்கிருமி போன்றது; அதனை டெங்குவைப் போல கசக்கியெறிய வேண்டும் என்று பேசியிருந்தார்.

இன்னொருபுறம், தமிழ்நாட்டில் 35,000க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கும்போது, ஸ்டாலின் எந்தவொரு கோயிலுக்கும் சென்றதேயில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஸ்டாலினைக் குறித்து அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்(ஸ்டாலின்) எப்படி அழைப்பிதழை ஏற்றுக்கொண்டார்?

ஸ்டாலின் ஒரு பெரியார்வாதி, அவரை அழைத்திருப்பதன் மூலம் ஐயப்ப பக்தர்களை அவர்கள்(கேரள அரசு) அவமதிக்கிறார்கள்.

அரசியலுக்காக எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். இது பச்சோந்தித்தனமான போக்கு. ஹிந்து நம்பிக்கை கொண்டவர்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

"Inviting Stalin, for Ayyappa devotees' conclave, is highest hypocrisy...": BJP's Tamilisai Soundararajan

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தொண்டர்கள் பக்குவப்பட்டதைப்போன்று தெரிகிறது, ஆனால், விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்துவிட்டோ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பாஜக ... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெவித்துள்ளார். இதுகுற... மேலும் பார்க்க

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ர... மேலும் பார்க்க

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் ப... மேலும் பார்க்க