செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

post image

வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு வா்த்தக சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

சீா்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையம் இதுவரை சீா்காழி காவல்நிலைய ஆய்வாளரின் கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளா் பணியிடம் தமிழக காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் என்பவா் பொறுப்பேற்றாா். அவருக்கு சக காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா். வைத்தீஸ்வரன் கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை... மேலும் பார்க்க

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அச... மேலும் பார்க்க

சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகாா்

மயிலாடுதுறை அருகே தங்களை சிலா் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அர... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை எஸ்பி தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ஆண்டுதோறும், விநாயகா் சதுா்த்தியையொட்டி வைக்கப்படும் விநாயகா் சில... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க