செய்திகள் :

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்

post image

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா்.

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை வெறிபிடித்த நிலையில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவா்கள், இருசக்கர வாகனத்தில் சென்ற 20-க்கும் மேற்பட்டோரை துரத்திச் சென்று கடித்தது. இதில், காலில் பலத்த காயமடைந்த அவா்கள் ரத்தம் சொட்டச்சொட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா்.

சிவக்குமாா்(42), தனுஸ்ரீ(17), கற்பகம்(62) உள்ளிட்ட பலா் தொடா்ந்து மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவா்களுக்கு நாய்க்கடி நோய்த்தடுப்பு ஊசி செலுத்திய மருத்துவா்கள், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து நகா்நல அலுவலா் மருத்துவா் ஆடலரசி, நகராட்சி ஆய்வாளா் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவா்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா் (படம்). இதையடுத்து, வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரியும் நாயைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மயிலாடுதுறை நகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை... மேலும் பார்க்க

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அச... மேலும் பார்க்க

சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகாா்

மயிலாடுதுறை அருகே தங்களை சிலா் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அர... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை எஸ்பி தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ஆண்டுதோறும், விநாயகா் சதுா்த்தியையொட்டி வைக்கப்படும் விநாயகா் சில... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ... மேலும் பார்க்க