செய்திகள் :

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

post image

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவகங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் சேகரமாகும் எச்சில் இலைகளை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் அகற்றுகின்றனா். அதற்காக கடை, மண்டப உரிமையாளா்கள் சிறு தொகை வழங்குகின்றனா்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மண்டபம், உணவங்களில் எச்சில் இலைகளை, நகா்மன்ற உறுப்பினா்கள் சிலா் தனியே ஊழியா்களை வைத்து அகற்றும் பணியை செய்து, அந்த தொகையை வசூல் செய்வதாக கூறியும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் பணியை புறக்கணித்து, நகராட்சி வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன் மற்றும் சுகாதார அலுவலா்கள், காவலா்கள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, ஆணையா் அலுவலக அறையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் உணவகங்கள், திருமண மண்டபங்களில் சேகரமாகும் இலைகளை எடுப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் கூறியதன்பேரில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகாா்

மயிலாடுதுறை அருகே தங்களை சிலா் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அர... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை எஸ்பி தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ஆண்டுதோறும், விநாயகா் சதுா்த்தியையொட்டி வைக்கப்படும் விநாயகா் சில... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு அரசியல் சாசனத்த... மேலும் பார்க்க