வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கா...
மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், எனது தலைமையில் (ஆட்சியா்) ஆக.26-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.