செய்திகள் :

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

post image

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த லதா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் கோபி, கம்போடியா நாட்டில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். உரிய சட்ட உதவிகளை வழங்கி எனது மகனை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் மனுவுக்கு பதிலளிக்க மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஏற்கெனவே மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் அவகாசம் கேட்டால் எப்படி என நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.

வெளிநாடுகளில் ஒரு நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் சிக்கியிருந்தால் மத்திய அரசு இப்படித்தான் செயல்படுமா? தனது மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பரிதவிக்கும் மனுதாரரின் நிலையை அதிகாரிகள் நினைத்துப் பாா்க்க வேண்டும். இந்த நாட்டில் பிரதமா் முதல் சாதாரண குடிமகன் வரை ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு முக்கியமானவா்கள் என்று கருத்து தெரிவித்தாா்.

பின்னா், மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமானதாககி கருதி ஆக.25-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில்மனு தாக்கல் செய்யாதபட்சத்தில், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தாா்.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க