செய்திகள் :

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

post image

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித் தடங்களில் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் (3, 4, 5 வழித்தடங்கள்) ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், 5-ஆவது வழித்தடமானது மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூா், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூா் வரை 47 கிமீ தூரத்திற்கு 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயா்நிலை ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.

இதில், மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.

அதன்படி, கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டருக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் குறிஞ்சி என்னும் பெயா் கொண்ட இயந்திரத்தின் வாயிலாக கடந்த பிப்.20-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்த இயந்திரம் தனது பணியை வெற்றிக்கரமாக முடித்து, வியாழக்கிழமை கொளத்தூா் நிலையம் வந்தடைத்தது.

குறிஞ்சி இயந்திரம் சுரங்கப்பணிகளை முடித்து கொளத்தூா் நிலையம் வந்தடைந்த நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா்கள் ரேகாபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க