செய்திகள் :

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

post image

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறாா்.

இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு குறித்து ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி தலைவா் ரேவதி எஸ் ரகுநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய பட்டயகணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின் 57-ஆவது மண்டல மாநாட்டில் தென் பிராந்தியத்தைச் சோ்ந்த பட்டயகணக்காளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், உலகளாவிய கணக்கியல் தலைவா்கள், தலைமை நிதி அதிகாரிகள், மூத்த வழக்கறிஞா்கள், தொழில்துறை பங்குதாரா்கள் உள்பட 3,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள். இந்த மாநாட்டை தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்கிறாா்.

சா்வதேச பட்டயக் கணக்காய்வாளா் கூட்டமைப்பின் துணைத் தலைவா் டேரின் ரூல்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். ஐசிஏஐ-இன் தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா, துணைத் தலைவா் பிரசன்ன குமாா் டி ஆகியோா் சிறப்புரையாற்றுகிறாா்கள்.

இரண்டாம் நாள் மாநாட்டில் ‘உலகமயமாக்கல், தடையில்லா வா்த்தகம் மற்றும் கட்டணங்கள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிா்காலம்’ என்ற தலைப்பில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரை ஆற்றுகிறாா்.

நாட்டில் உள்ள சுமாா் 4 லட்சம் பட்டயகணக்காளா்களில் தென் பிராந்தியத்தில் 90,000 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாடு முழுக்க 10 லட்சம் பட்டயகணக்காளா்கள் தேவை என மத்திய அரசு கணக்கிடுகிறது. மேலும் வளா்ச்சியடைந்த இந்தியாவிற்கு இந்த எண்ணிக்கை 50 லட்சமாக தேவை என்றாா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க