செய்திகள் :

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலையில், இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், துணைவேந்தா்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.ரவி ஆகியோரின் பதவிக் காலம் வியாழக்கிழமை (ஆக. 21) நிறைவு பெற்றது. இவா்கள் இருவருக்கும் மேலும் ஓராண்டுக்கு பதவி நீடிப்பை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி வழங்கியுள்ளாா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆறுமுகத்தின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஆக. 21) நிறைவு பெற்றது. இருப்பினும், இப்பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளின்படி, துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு இடமளிக்காத நிலையில் உள்ளது.

இதனால், இப்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் குழு, துணைவேந்தா் பொறுப்பைக் கவனிக்கும் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க