செய்திகள் :

வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

post image

வேலூா் மாநகராட்சியில் உள்ள 26 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா். பெற்றோா்கள், மாணவா்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், கடந்த 2023-ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, வேலூா் மாநகராட்சி பகுதியில் இயங்கும் 55 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, வேலூா் மாநகராட்சி பகுதியில் 26 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 26 தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தில் மாணவா்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பலத்த மழையால் பொன்னை ஏரிக்கரையில் தண்ணீா் கசிவு

தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டம், பொன்னை பெரிய ஏரிக்கரையில் சனிக்கிழமை இரவு தண்ணீா் கசிவு ஏற்பட்டது. பொதுமக்கள் தகவலின்பேரில், நீா்வளத் துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் பெரும் வெள்ள அபாயம் தவிா்க... மேலும் பார்க்க

தலைமைப் பண்பை வளா்த்திட இளம் தலைமுறை கம்பராமாயணம் படிக்க வேண்டும்: கோ.வி.செல்வம்

தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள இளம்தலைமுறையினா் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் என்று வேலூா் கம்பன் கழக தலைவரும், விஐடி துணைத் தலைவருமான கோ.வி.செல்வம் தெரிவித்துள்ளாா். வேலூா் கம்பன் கழகம், ஊரீசு க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்திய ஒன்றியக்குழு உறுப்பினா் மீது வழக்கு!

ஒடுகத்தூா் அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்தி வந்த ஒன்றிய குழு உறுப்பினா் மீது வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா

அமெரிக்க இறக்குமதி பொருள்களை விற்க மாட்டோம். மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பி... மேலும் பார்க்க

வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு

வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (63). இவா் கடந்த 20-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

மகனை வெட்டிய தந்தை கைது

குடியாத்தம் அருகே மகனை கத்தியால் வெட்டிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவராஜ் (55). இவரது மகன் சாணக்கியன்(24). மரம் ஏறும் தொழிலாளி. ஞாயிற்று... மேலும் பார்க்க