செய்திகள் :

`350 மி.லி-ல ஒரு உசுர காப்பாத்த முடியும்னா, என்னங்க யோசனை?'- 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்யும் இளைஞர்!

post image

ஒருவர் தானமாக கொடுக்கிற ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று பிரிக்கப்பட்டு மூன்று நோயாளிகளைக் காப்பாற்றுகிறது. மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அப்படிதான் நெல்லையைச் சேர்ந்த அனந்த்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை என 60 முறைக்கும் மேலாக ரத்தம் வழங்கி வருகிறார். அவரிடம் இதைப் பற்றி கேட்டபோது,

"2001ஆம் ஆண்டு ஸ்டீபன் என்பவரால் பீஸ் ரத்ததான கழகம் அமைக்கப்பட்டது. அக்கழகத்திலிருந்து ரத்ததானம் வழங்கத் தொடங்கிய நான் இப்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கி வருகிறேன்." என்று கூறியபடியே தனது ரத்ததான சான்றிதழ்களைக் காட்டினார்.

``இன்றையக் காலத்தில் மக்கள் இரத்ததானம் செய்வதற்கே பயப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக பத்து ஆண்டுகளுக்கு முன்பாக என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமொன்றைக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த ஒருவரை ஒருமுறை ரத்ததானம் செய்வதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதன்பிறகு அவரின் பெற்றோர்கள், "என் மகனை எப்படி நீங்கள் ரத்ததானம் செய்ய வைக்கலாம்?" என்று கேட்டுச் சண்டையிட்டனர். பிறகு சண்டையிட்ட அதே நபரின் தாய் ஒரு முறை தன் மகன் விபத்தில் ரத்தத்தை இழக்க ரத்தம் வேண்டி வந்து நின்றார் நாங்களும் கொடுத்தோம்.

அப்போது உணர்ந்தார் அந்த தாய் ரத்தத்தின் மகத்துவத்தை. இதனைப் போலவே சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது அப்பெண்ணின் தம்பியே ரத்ததானம் செய்வதற்கு முன் வரவில்லை. மனைவிக்குக் கணவர் கொடுக்காத நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற சமயங்களில் ரத்த உறவுகள் கட்டாயம் ரத்ததானம் செய்யலாம். தொடர்ந்து ரத்ததானம் செய்ய வேண்டும் இதுவே என் ஆசை"

"இன்றையக் காலத்தில் புரோக்கர்கள் கூடிவிட்டனர். யாருக்கு ரத்தம் தேவைப்படுகிறதோ அவர்களை மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். நம் பெயரைச் சொல்லி சிலர் கமிஷன் பார்க்க வாய்ப்புள்ளது. ரத்ததானம் செய்ய நினைத்தால் நோயாளியைப் பார்த்து நீங்கள் ரத்ததானம் செய்யலாம்."

"என்னோடு சேர்ந்து என் நண்பர்களும் ரத்ததானம் செய்து வருகின்றனர். எங்கள் கழகத்திலிருந்து 1300 பேருக்கு ரத்ததானம் செய்துள்ளோம். யாரிடமும் நாங்கள் ஐந்து பைசா வாங்கியது இல்லை. பழங்களோ, பழச்சாறுகளோ தந்தாலும் நோயாளிகளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திடுவோம். இதுவே எங்கள் நடைமுறை. எங்கள் நண்பர்களோடு ரத்ததானக் கழகத்திலிருந்து வருடாவருடம் பொங்கல் விழா நிகழ்த்தி ரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இருப்பதை மற்றவருக்குத் தருகிறோம். அவ்வளவுதான்.

ரத்ததானம் செய்வதால் ஒருவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 45 கிலோ எடை கொண்டவர்கள் இதைச் செய்யலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதால் மாரடைப்போ, மற்ற நோயோ வராது." என்று கூறியவர்,

"ரத்ததானத்தைப் போலவே கண் தானமும் முக்கியம். அதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். 25 வருடங்களாக நண்பர்களோடு சேர்ந்து ரத்ததானம் செய்கிற நாங்கள் கண் தானமும் செய்ய நினைத்துள்ளோம். ஒன்றரை மாதத்திற்கு முன்பாகத்தான் ரத்ததானம் செய்தேன். ரத்ததானம் செய்யுங்கள். நான்கு மாதத்திற்கு ஒரு முறையாவது இதை நீங்கள் செய்ய வேண்டும்." என்று சமூகத்திற்கும், இன்றைய இளைஞர்களுக்கும் தனது கருத்தையும் ஆசையையும் சொல்லி விடைப்பெற்றார் நெல்லையைச் சேர்ந்த அனந்த்ராஜ்.

தானத்தில் சிறந்தது ரத்ததானமும் தான்!

சேவை தொடர வாழ்த்துகள்!!!

``ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' - ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி

பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்'எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள்.தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ... மேலும் பார்க்க

''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!

பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம... மேலும் பார்க்க

`பள்ளி படிக்கும்போதே 2 கின்னஸ் சாதனைகள்; அடுத்து ஒலிம்பிக்தான்' - 9ம் வகுப்பு மாணவியின் லட்சிய பயணம்

நம்ம சென்னையில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஸ்ரீ ஓவியசேனா, ஒருமுறை அல்ல இருமுறை கின்னஸ் சாதனை படைத்து ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராகிக் கொண்டிருக்கிறார்.இந்தச் சிறுவயதிலே இத்தனைச் சாதனைகளோடு கனவு... மேலும் பார்க்க

கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவ... மேலும் பார்க்க

Human Story: ''நான் படிச்ச கல்வி என்னைக் கைவிடல; பொண்ணுங்க படிக்கணும்'' - ஓர் ஆசிரியையின் கதை!

பொண்ணுங்க படிக்கணும் படிக்கணும்னு சொல்றதுக்குப் பின்னாடி எவ்ளோ கனமான காரணமிருக்கு அப்படிங்கிறதுக்கு, நாமக்கல் மாவட்டம் தத்தாதிருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கவிக்குயில் வாழ்க்கையும் ஓர் உதாரணமாகிருக்கு. ... மேலும் பார்க்க

Human Story: ''அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ'' - மதுரையில் ஒரு மர நேசன்

பக்கத்துல இருக்கிற மனுஷங்களுக்கு ஒரு நல்லது செய்யுறதுக்கு நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கிற நம்ம மத்தியில, உயிர் வாழறதுக்காகப் போராடிக்கிட்டிருக்க மரங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கார் மதுரையைச் சேர்ந்த மண... மேலும் பார்க்க