செய்திகள் :

பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்; பின்னணி என்ன?

post image

பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு கடித்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் பாம்பை அருகில் வைத்து அந்தப் பெண்ணைப் படுக்க வைத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பு

இது குறித்து ஷிவ்ராஜ் தேவ் என்ற பயனர் வெளியிட்டுள்ள பதிவின்படி, ”பீகாரில் ஒரு பெண்ணை பாம்பு கடித்துவிட்டது. அவரை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அங்குச் சடங்கு செய்கின்றனர்.

ஒருவர் குச்சியின் உதவியுடன் பாம்பை மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணிற்கு அருகில் வர வைக்க முயல்கிறார். அவ்வாறு பாம்பு கடித்து விஷத்தை உறிஞ்சு என்று அதனைக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் நாகப்பாம்பு ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைக் கடிக்கிறது. கிராமப்புறங்களில் அரசாங்கம் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த வேண்டும்.

பாம்புக்கடிக்கு ஒரே சிகிச்சை பேயோட்டுதல் அல்ல விஷ எதிர்ப்பு மருந்து என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதே போன்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கட்னி மாவட்டத்திலும் நடந்துள்ளது.

வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞரை பாம்பு கடித்த போது மருத்துவச் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் செல்வதற்குப் பதில் மந்திரவாதி இடம் அழைத்துச் சென்றனர். அதனால் நேர்ந்த ஒரு மணி நேரக் காத்திருப்பால் அந்த இளைஞர் இறந்திருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது பாம்புக் கடி குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை என்று உணரப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Driver Amma: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது கேரளப் பெண்மணி; யார் இந்த மணியம்மா?

72 வயது இந்தியப் பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி.... மேலும் பார்க்க

Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுறா!

கடலின் ஆழங்களில் மறைந்து இருக்கும் ரகசியங்கள் சில நேரங்களில் நம்மை மூச்சுத்திணறச் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்தும். “சுறா என்றாலே பயம்!” – அப்படித்தான் பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த முறை ஒரு சுற... மேலும் பார்க்க

காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - `ஓர்' அடடே சம்பவம்!

தற்போது சமூக ஊடகங்களில் காதலை பகிர வீடியோக்கள், எமோஜிகள் எல்லாம் இருந்தாலும் கையெழுத்துக் கடிதங்கள் கொண்டிருந்த பாசம் மனதை வருடும். அதற்குச் சான்றாக, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சி... மேலும் பார்க்க

எக்ஸாம் ரிசல்ட் பெற ‘ஆடுடன்’ வந்த டீனேஜ் மாணவி- என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் லாங்காஷையரில் வசிக்கும் 16 வயது மாணவி மில்லி ஜான்சன், தனது பொதுத் தேர்வு முடிவுகளைப் பெறும்போது தனது ஆட்டையும் உடன் அழைத்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மற்ற மாணவர்கள் பெற்... மேலும் பார்க்க

விருந்தினர்களின் தனிமையை போக்கும் நாய் சேவை – சீன ஹோட்டலின் பின்னணி என்ன?

சீனாவின் வுஹான் நகரில் உள்ள கன்ட்ரி கார்டன் பீனிக்ஸ் என்ற ஹோட்டல் நாய்களை விரும்புவோருக்கென புதுமையான சேவையை வழங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் சுமார் ₹4,700 (385.39 யுவான்) செலவில... மேலும் பார்க்க

Guinness Records: “விமானத்தைக் கூட சாப்பிட்ட மனிதர்” – கின்னஸ் சாதனை படைத்த மிச்சேல் லொட்டிடோ யார்?

உணவு போல உலோகப் பொருட்களைச் சாப்பிட்ட மனிதராக பிரான்ஸைச் சேர்ந்த மிச்சேல் லொட்டிடோ (Michel Lotito) என்பவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வினோதமான சாதனைகளில் ஒன்றாக பிர... மேலும் பார்க்க