செய்திகள் :

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

post image

பிகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்கள் அனைவரும் ஏழைகள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிகாரில், நிகழாண்டு (2025) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளர் அதிகார யாத்திரை எனும் பெயரில், பேரணி நடைபெற்று வருகின்றது.

சீதாமார்ஹி பகுதியில், இன்று (ஆக.28) நடைபெற்ற பேரணியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்களும், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்கள் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை நாங்கள் அம்பலப்படுத்தினோம். மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களில் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டனர். தற்போது, அதை பிகாரிலும் செய்ய முயல்கின்றனர். ஆனால், நாங்கள் அதை அனுமதிக்கமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான கூடுதல் ஆதாரங்களை வரும் மாதங்களில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஜானகி கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சாமி தரிசனம் செய்தார். அவரது இந்தப் பேரணியில், ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi has said that all the 65 lakh people who were removed from the voter list in Bihar are poor.

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மற்றும் வெள்ளத்தினால், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பருவமழையின் தாக்கம் அதிகரித்து பெய்த கனமழையால் முக்கிய ந... மேலும் பார்க்க

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிர... மேலும் பார்க்க

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பகுதி பெண்கள் - ஆய்வு

பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்து... மேலும் பார்க்க

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.தேரதல் நடைபெறவிருக்கும் நில... மேலும் பார்க்க

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலகா கோரிக்கை விடுத்துள்ளார். இம்பாலில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரணியில் அவர் பேசினார்.... மேலும் பார்க்க