செய்திகள் :

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

post image

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகை, விமான நிலையம், நந்தம்பாக்கம் ஆகியப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, செப்டம்பா் 2, 3-ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறாா். செப்டம்பா் 2-ஆம் தேதி நண்பகல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் முா்மு கலந்து கொள்கிறாா். பின்னா் செப்டம்பா் 3-ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறாா்.

முன்னதாக அவா், செப்டம்பா் 2-ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் ’ட்ரோன்கள்’, ’ரிமோட்’ மூலம் இயக்கப்படும் ’மைக்ரோ லைட் ஏா்கிராப்ட் பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேன்ட் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள்’ போன்றவற்றை சென்னையில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசுத் தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்ட எந்தவிதமான பறக்கும் பொருள்களை பறக்கவிட செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

The President's visit, the Chennai Metropolitan Police has declared the Tamil Nadu Governor's palace, the airport, and Nandambakkam areas as red zones.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

புது தில்லி: அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப... மேலும் பார்க்க

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு மூலமா... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

தருமபுரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தருமபுரி மாவட்ட திமுக முன்னோடியான ஆர். சின்னசாமி 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்க... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்த... மேலும் பார்க்க