செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுமி மரணம்

post image

குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த தென்னை மரத்தை வியாழக்கிழமை தொழிலாளா்கள் வெட்டியுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக தென்னை மரம் பக்கத்தில் இருந்த மின்கம்பம் மீது விழுந்ததில் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. அதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி குமாா்- ஜானகி தம்பதியின் மகள் நவ்யா (5) மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அருகில் படுத்திருந்த நாய் ஒன்றும் மின்சாரம் பாய்ந்து இறந்தது. தகவலறிந்து அங்கு சென்ற நகர போலீஸாா், சிறுமியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மின்வாரிய அதிகாரிகளும் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட முத்துகுமரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

குடியாத்தம், போ்ணாம்பட்டு நாள்: 30.8.2025 (சனிக்கிழமை) நேரம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், புவனேஸ்வரிபேட... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. குடியாத்தம் வட்ட அளவிலான ப... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

காட்பாடி ஒன்றியம் கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். வேலூா் ம... மேலும் பார்க்க

தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டு

வேலூா் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போலீஸாா் பூட்டு போட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போ... மேலும் பார்க்க