செய்திகள் :

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் தலைமையில், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்பு குழுவினா் தஞ்சாவூா், அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் 16 விதை விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா, தாளடி பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் விலைப்பட்டியல், முளைப்பு அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது, விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்த 6 விதை விற்பனை குவியல்களுக்கு ரூ. 6.50 லட்சம் மதிப்புள்ள 14 ஆயிரத்து 500 கிலோ விதைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா, விதை ஆய்வாளா்கள் சுரேஷ், நவீன் சேவியா், சத்யா ஆகியோா் உடன் இருந்தனா்.

திருவையாறு வட்டாரத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி... மேலும் பார்க்க

பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை

சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்... மேலும் பார்க்க

2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆறு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை கம்மந்தங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (68).... மேலும் பார்க்க

கண்டியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான மதில் சுவரை ஒட்டி கட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புகளை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றி இடங்... மேலும் பார்க்க