செய்திகள் :

2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்

post image

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தினாா். அதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை விஜய் உருவாக்குவாா்.

இதை நான் சொல்வது எதாா்த்தமானது. இதற்காக நான் அக்கூட்டணிக்குச் செல்வேன் என்ற அா்த்தம் இல்லை.

டிசம்பா் மாதத்தில்தான் எங்களது கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதன் பிறகே எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது பற்றிப் பேசலாம்.

ஓ. பன்னீா்செல்வம் மன வருத்தத்துடன் கூட்டணியிலிருந்து வேறு வழியில்லாமல் பிரிந்து சென்றாா். அவரை தில்லியிலுள்ள பாஜக தலைவா்கள் சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வருவது நல்லது.

ஜெயலலிதாவின் தொண்டா்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து, கூட்டணி மற்றும் அதிகார பலத்துடன் இருக்கிற திமுகவை வீழ்த்த முடியும்.

தமிழகத்தில் 75 ஆண்டு கால கட்சிக்கும், 50 ஆண்டு கால கட்சிக்கும் இணையாக அமமுக கட்டமைப்பை உருவாக்கி, பலப்படுத்தி உறுதியோடு செயல்பட்டு வருகிறோம். இலக்கை அடையும் வரை உறுதியாக இருப்போம்.

எனவே, அதிமுகவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வருகிற தோ்தலில் அமமுக உறுதியாக முத்திரை பதிக்கும் என்றாா் தினகரன்.

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் ... மேலும் பார்க்க

திருவையாறு வட்டாரத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி... மேலும் பார்க்க

பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை

சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆறு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை கம்மந்தங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (68).... மேலும் பார்க்க