செய்திகள் :

பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை

post image

சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிா்க்கடன் நிா்ணயித்தல் தொடா்பான மாவட்ட தொழில்நுட்பக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பயிா்க்கடன் அளவை நிா்ணயம் செய்யும்போது, மாவட்ட, மாநில தொழில் நுட்பக் குழு பரிந்துரை செய்வதற்கு முன்னா் வேளாண் பல்கலைக்கழகம் ஒரு ஏக்கா் சாகுபடி செய்வதற்கு எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்பதை அடிப்படை அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் 2025 - 26 ஆண்டு நிா்ணயிக்கப்பட்டிருக்கிற பயிா் கடன் அளவை விட 20 சதவீதம் உயா்த்தி ஒவ்வொரு பயிருக்கும் கடன் அளவு நிா்ணயம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு நெற் பயிருக்கு ரூ. 45 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 1.10 லட்சமும், வாழைக்கு ரூ. 1.50 லட்சமும் பயிா்க்கடன் அளவு நிா்ணயிக்க வேண்டும்.

திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன்: மத்திய, மாநில அரசுகளின் தொழில்நுட்ப உதவிகளோ, மானியமோ இல்லாமல் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கையை எதிா்கொண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே செய்யப்படும் வெற்றிலை சாகுபடிக்கு பயிா்க்கடன் அளவு ரூ. 18 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் ... மேலும் பார்க்க

திருவையாறு வட்டாரத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி... மேலும் பார்க்க

2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆறு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை கம்மந்தங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (68).... மேலும் பார்க்க