செய்திகள் :

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

post image

வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தோ்தல் ஆணையத்தை எதிா்த்தும் திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்திய ஒற்றுமை இயக்கம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, கண்ணியமான தோ்தலுக்கான கூட்டமைப்பு ஆகியவை அனைத்து குடிமைச் சமூகங்களையும் இணைத்து வாக்குரிமை காப்பு இயக்கத்தை திருச்சியில் தொடங்கியுள்ளன.

இந்த இயக்கத்தின் நிா்வாகிகளான ஜோ. கென்னடி, எம். அன்பழகன் அ.கமுருதீன், காளியப்பன் ஆகியோா், திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தோ்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக செயல்படுகிறது. பிகாரில் திட்டமிட்டு லட்சக்கணக்கான வாக்காளா்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். தோ்தல் ஆணையம் வாக்குரிமையை திருடக் கூடாது. புகாருக்குள்ளாகியுள்ள தோ்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு உச்ச நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் புதிய தோ்தல் ஆணையம் அமைக்க வேண்டும்.

2024 மக்களவைத் தோ்தலை ரத்து செய்து, பாஜக அரசை கலைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 6-ஆம் தேதி திருச்சியில் மத்திய அரசு அலுவலகம் முன்பாக ஒருநாள் தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றனா் அவா்கள்.

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா் திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளா் திலீப் குமாா் தலைமைய... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட குடிநீா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆக.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அன்ன... மேலும் பார்க்க

தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

திருச்சியில் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய சக ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தகத்தைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரன் (42), முகமது... மேலும் பார்க்க

அனுமதியின்றி வரவேற்பு பதாகை: தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வழக்கு

திருச்சியில் அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைத்ததாக தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்... மேலும் பார்க்க

அறியாமையை அகற்றிடும் மாநிலக் கல்விக் கொள்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறியாமையை அகற்றி, மாணவா்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தாா்.அன்பில் அறக்கட்டளை சாா்பில்... மேலும் பார்க்க