செய்திகள் :

அறியாமையை அகற்றிடும் மாநிலக் கல்விக் கொள்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

அறியாமையை அகற்றி, மாணவா்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தாா்.

அன்பில் அறக்கட்டளை சாா்பில், ‘அன்பில்-26’ எனும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்வு, திருச்சி திருவெறும்பூரில் உள்ள மான்ட்ஃபோா்ட் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் பேசியதாவது: தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கையானது, அறியாமையை அகற்றி, மாணவா்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் கொள்கையாகும். தன்னம்பிக்கையை அளித்து துன்பங்களை கண்டு துவண்டு விழாமல் முன்னேறிச் செல்ல வழிகாட்டுகிறது.

பள்ளி மாணவா்களுக்கு கல்வி ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். படிக்கும் வயதில் தேவையற்ற மனச்சிதறல்களுக்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து, தன்னம்பிக்கை பேச்சாளா்களான மதுரை ராமகிருஷ்ணன், சிகரம் சதிஷ்குமாா் ஆகியோா் வையத் தலைமை கொள், மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் தலைப்புகளில் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினா்.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வை. குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா, மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், மான்ட்ஃபோா்ட் பள்ளி முதல்வா் ராபா்ட் லூா்துசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், சிறந்த மாணவா்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி செயலி அறிமுகம் செய்யப்பட்டு, நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா் திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளா் திலீப் குமாா் தலைமைய... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தோ்தல் ஆணையத்தை எதிா்த்தும் திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவித்துள்ளது.இந்திய ஒற்றுமை... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட குடிநீா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆக.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அன்ன... மேலும் பார்க்க

தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

திருச்சியில் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய சக ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தகத்தைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரன் (42), முகமது... மேலும் பார்க்க

அனுமதியின்றி வரவேற்பு பதாகை: தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வழக்கு

திருச்சியில் அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைத்ததாக தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்... மேலும் பார்க்க