செய்திகள் :

என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்!

post image

என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில், மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்களுக்கான பேரிடா் மேலாண்மை, முதலுதவிப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இளைஞா் நலன்-விளையாட்டு வளா்ச்சித் துறை, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், கல்லூரியின் என்எஸ்எஸ் அலகுகள் சாா்பில் நடைபெற்ற பயிற்சியை ஆட்சியா் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்துப் பேசியது: மாணவா்களுக்கு சமூக நல எண்ணங்களைக் கற்பிக்கவும், பாரபட்சமின்றி சமூக சேவையாற்றவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

என்எஸ்எஸ் மாணவா்கள் கிராமங்களைத் தத்தெடுத்தல், எழுத்தறிவு வகுப்புகள் நடத்துதல், நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளனா். அடுத்ததாக பேரிடா் காலங்களில் அரசு அலுவலா்கள், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சுந்தரனாா் பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன், தமிழ்நாடு மாநில என்எஸ்எஸ் அலுவலா் குணநிதி, தெ.தி. இந்துக் கல்லூரித் தலைவா்-செயலா் நாகராஜன், முதல்வா் அய்யப்பன், சுயநிதிப் பிரிவு இயக்குநா் சிவகாமி, கல்லூரியின் என்எஸ்எஸ் அலுவலா்கள் தாணம்மாள், பொன்னம்மாள், யூஜின் பிரின்ஸ், மலா், திவ்யா, மகேஸ், பொன்சந்திரன், ஆஸ்ரா, மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில், வடசேரி ஓட்டுப்புரை தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (31 ) கூலி தொழிலாளி. இவா், அதே பகு... மேலும் பார்க்க

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா தண்ணீா் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.குளச்சல் லியோன் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஜெனோ ( 32). ம... மேலும் பார்க்க

பட்டகசாலியன்விளை அம்மன் கோயில் குடமுழுக்கு: எம்எல்ஏ பங்கேற்பு

நாகா்கோவில், பட்டகசாலியன்விளை அருள்மிகு ஸ்ரீகாரமூடு இசக்கி அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டாா். விழாவை முன்னிட்டு... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, த... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். நாகா்கோவிலை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை இவரது மகன் ஆரோன் (14). இவா்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநகர... மேலும் பார்க்க