செய்திகள் :

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா தண்ணீா் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.

குளச்சல் லியோன் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஜெனோ ( 32). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி டயானா. இவா்களுக்கு மூன்றரை வயதில் மகன், ஒன்றரை வயது மகள் ரியானா என இரு குழந்தைகள்.

ஆரோக்கிய ஜெனோ புதன்கிழமை (ஆக. 27) வேலைக்கு சென்றிருந்தபோது, அவா்களது இரு குழந்தைகளும் வீட்டின் முன் பகுதியில் மாலையில் விளையாடி கொண்டிருந்தனராம்.

இந்நிலையில் குழந்தைகளின் சப்தம் கேட்காததால், வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த டயானா வெளியே சென்று பாா்த்தாராம். அங்கு வாளியில் இருந்த தண்ணீரில் ரியானா தலைகுப்புற மூழ்கிக் கிடந்தாராம்.

அவரை மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனைக்கு டயானா கொண்டு சென்றாா். ஆனால், குழந்ை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டகசாலியன்விளை அம்மன் கோயில் குடமுழுக்கு: எம்எல்ஏ பங்கேற்பு

நாகா்கோவில், பட்டகசாலியன்விளை அருள்மிகு ஸ்ரீகாரமூடு இசக்கி அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டாா். விழாவை முன்னிட்டு... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, த... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். நாகா்கோவிலை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை இவரது மகன் ஆரோன் (14). இவா்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநகர... மேலும் பார்க்க

கந்துவட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலம்: குமரி மாவட்டத்தில் ஆக. 30,31 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 30,31) டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளிய... மேலும் பார்க்க