செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

post image

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் அமைந்திருந்த யூதர்களின் கோயில் மற்றும் உணவகம் ஆகியவற்றின் மீது தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தச் சம்பவங்களை, ஈரான் அரசுதான் இயக்கியது என்பதற்கான ஆதாரங்களை, தங்களது புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அல்பானீஸ் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அனைத்து ராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார். மேலும், அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் தூதர் அஹமது சடேகி, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (ஆக.28) வெளியேறியதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் எந்தவொரு ஈரானிய அதிகாரிகளும் ஈடுபடவில்லை என அந்நாட்டின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கெஸ் கூறியுள்ளார்.

இருப்பினும், மைக் பர்கஸின் தகவலுக்கும் பிரதமர் அல்பானீஸின் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவொரு ஆதாரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

It has been reported that Iran's ambassador to Australia has left the country.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

ஜப்பானில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் கைதி ஒருவரின் கல்லறையில் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர். டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள யோகோஹாமா நகரத்தில் உள்ள... மேலும் பார்க்க

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

2025-ம் ஆண்டில் மட்டும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மாகாணங்களில் திடீர் ... மேலும் பார்க்க

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல் காரணமாக, சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு ரஷியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பல உலக நாடுகளுக்கும் எரிபொருள் ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

இந்தியா மீது, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நாளில், அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமரிசித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனா... மேலும் பார்க்க

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மினசோட்டா மாகாணம், மினீயாபொலிஸ் நகரில் உள... மேலும் பார்க்க