செய்திகள் :

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

post image

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மினசோட்டா மாகாணம், மினீயாபொலிஸ் நகரில் உள்ள பள்ளியில் முதல் நாள் வகுப்புக்குச் செல்வதற்கு முன்னதாக, அந்த பள்ளியின் தேவாலயத்தின் மாணவர்களுக்கான சிறப்பு வழிபாட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் தேவாலயத்தில் வழிபாட்டு கூட்டத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில், 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் பலியாகினர். மேலும், 14 மாணவர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்?

இந்த சம்பவம் குறித்து மினீயாபொலிஸ் காவல்துறை தலைவர் கூறுகையில், ”தேவாலயத்தில் வழிபாட்டு நடந்துகொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் ரைபிள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இளைஞர், மாணவர்கள் நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து, தன்னைதானே அந்த இளைஞரும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராபின் வெஸ்ட்மேன் என்ற 20 வயது இளைஞர் என அடையாள காணப்பட்டுள்ளடது, அவர் குற்றப்பின்னணி உடையவர் அல்ல எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Two children were killed and 17 others, including 14 children, were seriously injured in a school shooting in the United States on Wednesday.

இதையும் படிக்க : 50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் காரணமாக எ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்

கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் தாவி ந... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது: மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப... மேலும் பார்க்க

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன... மேலும் பார்க்க