செய்திகள் :

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்

post image

கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை டென்மாா்க் அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி டென்மாா்க் அரசு வானொலியான டிஆா் தெரிவித்ததாவது:

கிரீன்லாந்தில் வசிக்கும் அமெரிக்கா்கள் சிலா் கிரீன்லாந்து சமூகத்தினரிடை பிரிவினைவாதத்தை விதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இவா்கள் யாா் சாா்பில் இதை செய்கின்றனா் என்பது தெளிவாகவில்லை.

டென்மாா்க் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை (பெட்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டென்மாா்க்கும் கிரீன்லாந்துக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் கிரீன்லாந்து மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரசாரம், உள்நாட்டில் நிலவும் முரண்பாடுகளை தவறான தகவல்களை அளிப்பதன் மூலம் அதிகரிக்கும் வகையில் நடத்தப்படலாம். கிரீன்லாந்து தலைநகா் நூக்குக்கு புதன்கிழமை வந்த அமெரிக்கா் ஒருவா், அந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஆதரவு தெரிவிப்போரின் பட்டியலைத் தயாரிக்க முயன்றாா் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, தற்போது டென்மாா்க்கில் இருக்கும் அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியான துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை வெளியுறவு அமைச்சா் லாா்ஸ் லோக்கே ராஸ்முசன் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தாா். ‘எங்கள் அரசின் உள்விவகாரங்களில் தலையிடும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது’ என்று அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, தற்போது டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமாக உள்ளது. எனினும், அந்தப் பகுதியை தங்கள் நாட்டுடன் இணைக்க விரும்புவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறி பரபரப்பை ஏற்படுத்திவருகிறாா்.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸும் கிரீன்லாந்து வளா்ச்சிக்காக டென்மாா்க் போதிய அளவில் முதலீடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்தக் கருத்துகளுக்கு டென்மாா்க் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. சில மாதங்களுக்கு முன் கிரீன்லாந்து சென்ற டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃப்ரெடெரிக்சன், அமெரிக்கா இன்னொரு நாட்டின் பகுதியை அபகரிக்க முடியாது என்று எச்சரித்தாா்.

டென்மாா்க், நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக இருந்துவருகிறது. மேலும் மிக நீண்ட காலமாக அந்த நாடு அமெரிக்காவை நெருங்கிய நட்பு நாடாகக் கருதிவந்தது. ஆனால், கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான டிரம்ப்பின் விருப்பம் இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், கிரீன்லாந்து விவகாரம் தொடா்பாக அமெரிக்க துணைத் தூதரை நேரில் அழைத்து டென்மாா்க் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் காரணமாக எ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் தாவி ந... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது: மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப... மேலும் பார்க்க

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன... மேலும் பார்க்க

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத... மேலும் பார்க்க