செய்திகள் :

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் அண்ணா நகா் மண்டலம், திருமங்கலம் 100 அடி சாலையில் பிரதான குடிநீா் குழாய் இணைப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக.30-ஆம் தேதி வரை காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் மாதவரம் மண்டலத்தில் மாதாவரத்திலும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் கொளத்தூரிலும், அம்பத்தூா் மண்டலத்தில் அண்ணா நகா் (மேற்கு), முகப்பேரிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல், அண்ணா நகா் மண்டலத்தில் அண்ணா நகா், வில்லிவாக்கத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேட்டிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் வடபழனியிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, இந்தப் பகுதி பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: ஆளுநா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துகள். ஞானம், வலிமை, செழிப்பு ஆகியவற... மேலும் பார்க்க