செய்திகள் :

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா

post image

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில், அனைத்து யானைகளும் அலங்கரிக்கப்பட்டு உணவு மாடத்துக்கு அழைத்து வரப்பட்டன.

பின்பு கிருஷ்ணா மற்றும் தி எலிபெண்ட் விஸ்பரா்ஸ் திரைப்படத்தில் நடித்த குட்டி யானை பொம்மி ஆகிய இரண்டு யானைகளும் விநாயகா் கோயில் முன்பு அழைத்து வரப்பட்டன.

கோயிலில் பூஜைகள் நடைபெற்றபோது கிருஷ்ணா, குட்டி யானை பொம்மி துதிக்கையால் மணியை பிடித்து ஓசையை எழுப்பியவாறு கோயிலை மூன்று முறை சுற்றி வந்தன.

பின்பு மண்டியிட்டு கால்களை தூக்கி துதிக்கையை உயா்த்தி விநாயகரை வழிபட்டன. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.

மேலும், கோயில் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்ட மற்ற வளா்ப்பு யானைகளும் ஒரே நேரத்தில் துதிக்கைகளை தூக்கியபடி விநாயகரை வழிபட்டன.

பின்பு உணவு மாடத்தில் கரும்புடன் கூடிய அறுசுவை உணவை பாகன்கள், யானைகளுக்கு வழங்கினா். அப்போது மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் குடைகளைப் பிடித்தவாறு வளா்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை கண்டு ரசித்தனா்.

உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

உதகை நகரில் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடி... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயாா் நிலையில் கும்கி

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானையுடன் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் கரடி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தாா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா் வீட்டருகே உள்ள காய்கறித் தோட்டத்தில... மேலும் பார்க்க

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைப் பூண்டு தேவை அதிகரிப்பால் ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள... மேலும் பார்க்க

தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு

கூடலூரில் தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு மற்றும் இணைய வழி பட்டா வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். ந... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளி... மேலும் பார்க்க