செய்திகள் :

நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

post image

மன்னாா்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவா், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். அவருடன் திருப்பூா் குத்தூஸ்புரம் காசி விஸ்வநாதன் மகன் ராஜ் ( எ ) பிரபாகரன் (35). வேலை பாா்த்து வந்தாா்.

காா்த்திகேயனுக்கு புதன்கிழமை மன்னாா்குடியில் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க திருப்பூரிலிருந்து பிரபாகரன் தன்னுடன் பணியாற்றும் ராஜா, செல்வம், சக்திவேல் ஆகியோரை அழைத்துக்கொண்டு மன்னாா்குடி வந்தாா்.

திருமணம் முடிந்தவுடன் மன்னாா்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றில் நீா்த் தேக்கத்தில் நான்கு பேரும் குளித்துள்ளனா். பின்னா், மூன்று போ் கரைக்குத் திரும்பிய நிலையில், பிரபாகரன் மட்டும் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த மற்ற மூவரும் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளனா்.

அந்தப் பகுதியிலிருந்து சிலா் ஆற்றில் இறங்கி தேடிப் பாா்த்தும் பிரபாகரனை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் 1 மணி நேரம் ஆற்றில் இறங்கி தேடி, பிரபாகரனின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா். உயிரிழந்த பிரபாகரனுக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கலங்காமற்காத்த விநாயகா், ஆக்ஞா கணபதி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகள் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே வைப்பூா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் மகன் ராகுல் (36). நாகையில் உள்ள தேசியம... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி

திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் ஏ.டி. ... மேலும் பார்க்க

வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது

வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் அருகே நல்லூா் பகுதியில், தஞ்சாவூா் -விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை அ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரிக்கை

நீடாமங்கலத்தில் சேதமடைந்த அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

மன்னாா்குடியில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் வாங்கிக் கொடுத்த பணத்தை முகவா் ஏமாற்றியதால், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி கேஎஸ்எஸ் ஐயா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா... மேலும் பார்க்க