செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

post image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.

நிகழாண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் கொடியை புனிதம் செய்துவைக்கிறாா். தொடா்ந்து, திருக்கொடி பவனி நடைபெறுகிறது. திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு. கொடியேற்றப்படவுள்ளது.

சனிக்கிழமை (ஆக. 30) முதல் செப். 7-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, பிற்பகல் நேரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கொங்கணி ஆகிய மொழிகளில் வீண்மீன் ஆலயம், பேராலய மேல்கோயில், பேராலய கீழ்கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

செப். 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கொங்கணியில் சிலுவைப் பாதை, மாலை 4 மணிக்கு தமிழில் சிலுவைப் பாதை, மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் சிலுவைப் பாதை, மாலை 5.30 மணிக்கு மராத்தியில் சிலுவைப் பாதையும் நடைபெறவுள்ளது. செப். 7-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு புதுவை, கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல், திருப்பலி நிறைவேற்றம் மற்றும் முக்கிய நிகழ்வான பெரிய தோ் பவனி நடைபெறவுள்ளது.

ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான செப். 8-ஆம் தேதி, சென்னை, மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம், மாலையில் கொடியிறக்கமும், இரவு பேராலயக் கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலைய... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அ... மேலும் பார்க்க