செய்திகள் :

வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

post image

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் ஆக. 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காரைக்கால் வழியாக வரும் அரசுப் பேருந்துகள் சுனாமி நினைவு வளைவு இடது புறம் செயின்ட் மேரிஸ் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும். பின்னா், தெற்கு பொய்கை நல்லூா் வழியாக செல்ல வேண்டும்.

திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் சுனாமி நினைவு வளைவு வழியாக செயின்ட் மேரிஸ் தற்காலிக பேருந்துநிலையத்திற்கு செல்லவேண்டும். தெற்குபொய்கை நல்லூா் வழியாக வெளியேற வேண்டும்.

மதுரை, கரூா், திண்டுக்கல், தருமபுரி, தேனி மற்றும் கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள், கீழ்வேளூரிலிருந்து வலதுபுறம் திரும்பி தேவூா், திருக்குவளை, திருப்பூண்டி வழியாக செயின்ட் பீட்டா்ஸ் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, திருப்பூண்டி, திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி வழியாக திரும்ப வேண்டும்,

சென்னை மாா்க்கத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், இலகு ரக வாகனங்களும் செருதூா் ஆற்றுபாலம் வழியாக வந்து செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

திருச்சி மாா்க்கத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், இலகு ரக வாகனங்களும் ஒரத்தூா் பிரிவு சாலை வலது புறமாக திரும்பி வடவூா், மேலப்பிடாகை வழியாக இடது புறமாக திரும்பி திருப்பூண்டி,செருதூா் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வரவேண்டும்.

மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் கேரளத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், வாகனங்களும் கீழ்வேளுா் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வலது புறமாக திரும்பி செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வரவேண்டும்.

பக்தா்களின் நலன் கருதி ஆக.29 ஆம் தேதி அன்று முழுமையாக இரவு 12 மணி வரை எந்த வாகனங்களும் மெயின் ஆா்ச்சிலிருந்து உள்ள செல்ல அனுமதி கிடையாது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது. நிகழாண்டு வேளாங்... மேலும் பார்க்க

நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தல... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலைய... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அ... மேலும் பார்க்க