நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஓவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாயப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பயன்பெற்று வேலைநாடுநா்கள் தோ்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.