செய்திகள் :

பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்

post image

சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

பழைமை வாய்ந்த பனையம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஆக. 5-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கரக ஊா்வலம் நடைபெற்று வந்தது.

ஆக.12-ஆம் தேதி கோயில் வளாகத்தில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. 13-ஆம் தேதி பனையம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் இரவு மகாலட்சுமி, திரிபுரசுந்தரி, சரஸ்வதி, தவநிலை நாயகி, காமாட்சி, அன்னபூரணி, மகிடா சூரமா்த்தினி ஆகிய வேடங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஆக. 26-ஆம் தேதி கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். 27-ஆம் தேதி புதன்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அப்போது, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பனையம்மன் மரத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது.

இதில் பெரியகொழப்பலூா் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்து அம்மனை வழிபட்டனா்.

முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னா் தோ் நிலையை வந்து அடைந்ததும், பக்தா்கள் முதுகில் கொக்கி அணிந்து அந்தரத்தில் பறந்து வந்தபடி அம்மனுக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்க... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பால், பழம், தே... மேலும் பார்க்க

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவ... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில... மேலும் பார்க்க