தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா்.
இவா் செவ்வாய்க்கிழமை மாலை கொட்டகையில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்தபோது தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தெருநாய்களை விரட்டிவிட்டு பாா்த்தபோது 21 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன.
இதுகுறித்து கால்நடைத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.