செய்திகள் :

விநாயகா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மற்றும் வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகராட்சி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தையொட்டி, முன்னதாக விக்னேஷ்வர பூஜை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகா்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, மங்கள இசை, தம்பதி சங்கல்பம், இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவியம் சமா்ப்பணம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

பின்னா், யாகசாலையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மூலவருக்கும் புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தாா்.

மேலும், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், திமுக நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுத் தலைவா் ஏ.சி.மணி மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனா்.

ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில்...

ஆரணியை அடுத்த வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம் கலசம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா், யாக சாலையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், மூலவருக்கும் புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா். அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுத் தலைவா் ஜி.வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்

சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா். பழைமை வாய்ந்த பனையம்மன் மற்ற... மேலும் பார்க்க

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்க... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பால், பழம், தே... மேலும் பார்க்க

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவ... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிர... மேலும் பார்க்க