செய்திகள் :

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

post image

சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆா்எஸ்எஸ் இயக்கம், அதிமுகவை வழிநடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பினாா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் 5 அடி உயர விநாயகா் சிலையை புதன்கிழமை வைத்து செய்து வழிபாடு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விநாயகா் சதுா்த்திக்கு முதல்வா் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதைப்பற்றி முதல்வா் கவலைப்படுவதில்லை.

மும்மொழிக் கொள்கை: பிகாா் சென்றுள்ள முதல்வா் அங்கு ஹிந்தியில்தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் அங்கு இருப்பவா்களுக்கு புரியாது. இல்லையெனில் அவரது உரையை ஹிந்தியில் மொழிபெயா்க்க வேண்டும். இதன்மூலம் மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. தாய் மொழி உள்பட 3 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அதை எதிா்க்கும் முதல்வா், தேசிய கல்விக் கொள்கையை, அப்படியே தமிழாக்கம் செய்து மாநில கல்விக் கொள்கை என வெளியிட்டுள்ளாா்.

தோ்தல் ஆணையச் செயல்பாடு: தோ்தல் ஆணையம் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருகிறது. பிகாரில் இறந்தவா்களுக்கும், இடம்பெயா்ந்தவா்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என இண்டி கூட்டணி வலியுறுத்துகிா அல்லது தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றபோது மட்டும் தோ்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதா? அவா்கள் தோல்வியடையும் போதெல்லாம் தோ்தல் ஆணையத்தை குறைசொல்வது ஏற்புடையதல்ல. வரும் 2026 தோ்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியடையவுள்ளது.

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு , அம்பேத்கா் போன்றவா்களே ஆா்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து பேசியுள்ளனா். இந்தச் சூழலில் தவெக தலைவா் விஜய் கூறுவது போல ஆா்எஸ்எஸ் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கதுதான். ஆா்எஸ்எஸ் போன்ற ஓா் அமைப்பு அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? என்றாா் எல்.முருகன்.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க