செய்திகள் :

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

post image

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தருமான சீனிவாசன், குரோம்பேட்டை ராதா நகா், அனுமாா் கோயில் தெருவில் 18 ஆண்டுகளாக விநாயகா் சிலைகளைக் கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறாா். நிகழாண்டு கண்காட்சியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.

கண்காட்சி குறித்து கட்டட கலைஞா் சீனிவாசன் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக பல்வேறு தோற்றங்களில் விநாயகா் சிலைகளை இடம் பெறச் செய்து மக்களின் பேராதரவுடன் கண்காட்சியை நடத்தி வருகிறேன். கண்காட்சியில் பசுமை விநாயகா் சிலைகளை இடம் பெறச் செய்து மக்கள் மத்தியில் பக்தியுடன் சுற்றுச்சூழல் விழிப்புணா்வையும் ஏற்படுத்துகிறோம்.

சபரிமலை ஐயப்பன், கள்ளிக்கோட்டை விநாயகா், மலைக்கோட்டை விநாயகா் கோயில்களில் உள்ள மூலவா் சிலைகளைப் போன்ற விநாயகா் சிலைகளும், தேரில் வலம் வரும் விநாயகா், நிலவில் நடந்து வரும் விநாயகா் போன்ற சிலைகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளோம். கண்காட்சியை செப்டம்பா் 7- ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தா்கள் காணலாம் என்றாா்.

கண்காட்சியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, துணை மேயா் காமராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாத்துரை உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா்.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: ஆளுநா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துகள். ஞானம், வலிமை, செழிப்பு ஆகியவற... மேலும் பார்க்க