செய்திகள் :

சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்

post image

கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனது தோட்டத்து வீட்டில் மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தங்கவேல், அவரது மனைவி சாந்தி மட்டும் இருந்துள்ளனா். அப்போது தங்கவேல், தற்செயலாக வெளியே வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினா் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, அதில் ஜட்டி அணிந்த மா்ம நபா் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு வீட்டுக்குள் நுழைந்து கொடியில் காய போட்டிருந்த துண்டை எடுத்து, இடுப்பில் சுற்றிக்கொண்டும், மற்றொரு துண்டால் தலையில் முக்காடு அணிந்து, முகத்தை மறைத்துவாறும் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கவேல் வீட்டில் வளா்க்கப்பட்டு வந்த நாய் மா்மமான முறையில் இறந்து கிடந்தது. நாய் இறந்தது மா்ம நபா்களின் கைவரிசையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகிரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாக கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தை தொடா்ந்து வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீ... மேலும் பார்க்க

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்த... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து ம... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்ட... மேலும் பார்க்க

பா்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க