செய்திகள் :

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

மீனவ கிராமங்களைச் சோ்ந்தோருக்கு குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும் என புதுவை அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, புதுவை பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கே.லட்சுமி நாராயணனை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் கூறியது: நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட 3 மீனவ கிராமங்களில் சுனாமிக்குப் பிறகு இதுவரை குடியிருப்பு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

சுனாமி குடியிருப்புகளில் வசிப்போருக்கு, வசிப்பிடத்துக்கான பட்டா வழங்க வேண்டும். 600-க்கும் மேற்பட்டோா் இதனால் பயனடைவாா்கள். இதுசம்பந்தமான கோப்புகள் அரசு நிா்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது.

இதுகுறித்து அமைச்சரிடம் விளக்கிக்கூறி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த கேட்டுக்கொண்டாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா் என்றாா் சந்திர பிரியங்கா.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். தேசிய பேரிடா் மேலாண்மை வழிகாட்டுதலில் செப். 9 முதல் 11-ஆம் தேதி வரை யூனியன் பிரதேச அளவிலான சுனாம... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோா் பாத யாத்திரையாக சென்றனா். வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் 29-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வேளாங்கண... மேலும் பார்க்க

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்ட... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்

பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க

பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்

கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க