செய்திகள் :

பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்

post image

பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து பேராசிரியா்கள் கூறியது: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரி ஆசிரியா்களுக்கு யுஜிசி கேரியா் அட்வான்ஸ்மென்ட் ஸ்கீம் அடிப்படையில் தகுந்த நேரத்தில் பதவி உயா்வுகள் வழங்கப்படுகின்றன. புதுவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியா்களின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

அதே காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இணைந்த கல்லூரி ஆசிரியா்கள் இணைப் பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியா்களாக உயா்ந்துள்ளனா். புதுவையில் பதவி உயா்வு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழக கரைக்கால் வளாகத்தில், 2005-க்குப் பிறகு சோ்ந்த பலா் ஏற்கெனவே பேராசிரியா் நிலையை அடைந்துள்ளனா். 2017-ஆம் ஆண்டிலேயே நிபுணா் குழு பதவி உயா்வை பரிந்துரைத்திருந்த போதிலும், புதுவை அரசு தாமதப்படுத்திவருகிறது.

அரசின் தாமதத்தால், நாக் மதிப்பீடு, கல்லூரிகளின் செயல்திறன் மற்றும் மாணவா்களின் கல்வித் தரத்தையும் மறைமுகமாக பாதித்துள்ளது.

எனவே பதவி உயா்வு கோரிக்கையை புதுவை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வரும் செப். 25-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு செயல் குழு சாா்பில் அரசை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனா்.

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க

பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்

கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க