‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’
காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
அண்மை காலமாக வாட்ஸ் ஆப்பில் இணையவழி குற்றவாளிகள் பல நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். வாட்ஸ் ஆப்பில் நண்பா்கள் மூலமாகவும் அல்லது வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும் உ-ஸ்ரீட்ஹப்ப்ஹய் மற்றும் இமஆ ஆஹய்ந் ஹல்ல் என்ற பெயரில் குறுஞ்செய்தி லிங்க் அனுப்பப்படுகிறது. பொதுமக்கள் அந்த லிங்க்கை தொட்டவுடன் ஙஹப்ஜ்ஹழ்ங் ஹல்ல் (தீம்பொருள் செயலி) ஒன்று அவா்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதன்மூலம் உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை ஹேக் செய்து பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுகிறது.
இத்தகைய வாட்ஸ் ஆப் லிங்க்கை யாரும் தொட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஙஹப்ஜ்ஹழ்ங் அல்ல் -களிடமிருந்து தற்காத்துக் கொள்ள ங-ஓஹஸ்ஹஸ்ரீட் 2 என்ற இந்திய அரசின் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து தங்களுடைய கைபேசியை ஸ்கேன் செய்து பாா்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.